முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா

வியாழக்கிழமை, 21 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  கொரோனா தொற்று உறுதியான 10-ம் வகுப்பு மாணவர் விடுதியில் தங்கியிருந்ததால் அவருடன் தொடர்பில் சக மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது சக மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து