முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு 350 சிறப்பு பஸ்கள்

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 31-ந்தேதி வரை விழா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. 

இதையொட்டி திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து பழனிக்கு பக்தர்கள் வருகை தருவார்கள். இவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மண்டலம் சார்பில் வருகிற 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மேற்குறிப்பிட்ட இடங்களில் இருந்து பழனிக்கும், பழனியில் இருந்து மேற்குறிப்பிட்ட இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

இந்த தகவலை மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் முருகேசன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து