முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால் தினகரன் அலுவலகங்களில் 3-வது நாளாக சோதனை

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவரும் கிறிஸ்துவ மதபோதகருமான பால் தினகரனுக்கு சொந்தமான 25 இடங்களில் மூன்றாவது நாளாக நேற்றும் வருமான வரி சோதனை தொடர்ந்தது. இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மத பிரசார கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

இயேசு அழைக்கிறார் என்ற குழுமத்திற்கு வந்த நிதிக்கு, முறையாக வரி செலுத்தவில்லை என வருமான வரித் துறைக்கு புகார் வந்தது. மேலும் கல்வி நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் ஜெபக் கூட்டங்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரக் கூடிய நன்கொடைகளை குறைத்து காட்டி, வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார்கள் வந்தன.

இந்த புகார்களின்படி சென்னை, கோவை உட்பட, பால் தினகரனுக்கு சொந்தமான, 25 இடங்களில், வருமான வரித் துறை யினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சென்னை பாரிமுனை பிரசார அரங்கம், அடையாறு ஜீவரத்தினம் நகர் வீடு, ஆர்.ஏ., புரம் இயேசு அழைக்கிறார் அரங்கம் உட்பட, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.

இதே போல, கோவையில், காருண்யா பல்கலை, காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் உட்பட, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மூன்றாவது நாளாக சோதனை தொடர்ந்தது. இது குறித்து வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:-

இயேசு அழைக்கிறார் அமைப்பில் நேற்று மூன்றாவது நாளாக சோதனை தொடர்ந்தது. மூன்றாவது நாளும் வரி ஏய்ப்பு செய்ததற்கான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, குழும அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருந்தாலும் சோதனை முடிந்த பின், வெளிநாட்டில் உள்ள பால் தினகரனுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து