முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலி, ரோகித் சர்மா, ரஹானே ஏமாற்றம்: புஜாரா, ரிஷப் பண்ட் அரைசதம்- இந்தியா 225/6

ஞாயிற்றுக்கிழமை, 7 பெப்ரவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து  3-வது நாள் ஆட்டத்தின்போது 578 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஜோ ரூட் 218 ரன்களும், டாம் சிப்லி 87 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அஷ்வின், பும்ரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இஷாந்த் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினார். 

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷுப்மான் கில் 29 ரன்கள் எடுத்த நிலையிலும் ஜாஃப்ரா ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தனர். 

அடுத்து வந்த புஜாரா ஒரு பக்கம் சிறப்பாக விளையாடினார். ஆனால் விராட் கோலி 11 ரன்னிலும், ரஹானே 1 ரன்னிலும் வெளியேறினர். இதனால் இந்தியா 73 ரன்னுக்குள் 4 விக்கெட் இழந்தது. 

5-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 

புஜாரா 106 பந்திலும், ரிஷப் பண்ட் 40 பந்திலும் அரைசதம் அடித்தனர். இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடினர். இந்தியாவின் ஸ்கோர் 192 ரன்னாக இருக்கும்போது புஜாரா 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

மறுமுனையில் விளையாடிய ரிஷப் பண்ட் சதத்தை நோக்கி சென்றார். ஆனால் 88 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் டாம் பெஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து