முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்: கெஜ்ரிவால் அறிவிப்பு

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், டெல்லியிலும் அதன் தாக்கம் நீடித்து வருகிறது. தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், டெல்லியில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

 இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கெஜ்ரிவால் கூறியதாவது: - 

எங்களுக்கு போதுமான அளவு கொரோனா தடுப்பூசிகள் மற்றும் வயது வரம்பு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை மத்திய அரசு தளர்த்தும் பட்சத்தில் 2-3 மாதங்களில்  பெருமளவு மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி விடுவோம். 

தற்போது 7-10 நாட்கள் போடும் அளவுக்கே தடுப்பூசி கையிருப்பு உள்ளது. ஊரடங்கு ஒரு போதும் அமல்படுத்தப்படாது. எனினும், புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து