முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,52,879 பேருக்கு கொரோனா

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,58,805 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 839 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,69,275 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 90,584 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,20,81,443 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 11,08,087 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை 10,15,95,147 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இந்தியாவில் இதுவரை 25,66,26,850 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் 14,12,047 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து