முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ. தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வுகள் மே மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா, சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்யுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,

டெல்லியில் 6 லட்சம் மாணவ, மாணவிகள் சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வு பணியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இது பெரிய அளவிலான கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும். தேர்வு எழுதப் போகும் மாணவ மாணவிகளின் வாழ்க்கையும், ஆரோக்கியமும்தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். இதனை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து