முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார்: கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல் ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திய ஜலீல் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என்று லோக் ஆயுக்தா கூறியிருந்த நிலையில் நேற்று  அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

தமது பதவியை தவறாக பயன்படுத்தியதாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீலை ராஜினாமா செய்ய முதல்வர் பினராய் விஜயனை கடந்த சில நாள்களுக்கு முன்பு லோக் ஆயுக்தா வலியுறுத்தியது. 

லோக் ஆயுக்தாவின் இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஜலீல் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். எனினும் இது தொடர்பான விசாரணை நடைபெறுவதற்கு முன்பு அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து