முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பு தொழுகையுடன் ரமலான் நோன்பை தொடங்கிய இஸ்லாமியர்கள்

புதன்கிழமை, 14 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்புத் தொழுகையுடன் இஸ்லாமியர்கள் நோன்பை தொடங்கினர்.

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.

இந்த ஆண்டுக்கான ரமலான் மாத பிறை திங்கட்கிழமை தமிழகத்தில் தென்படவில்லை. எனவே நேற்று புதன்கிழமை முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு தலைமை ஹாஜி சலாகுதீன் முகம்மது அய்யூப் வெளியிட்டார். 

அதன்படி, பல்வேறு இடங்களில் சிறப்புத் தொழுகையுடன் இஸ்லாமியர்கள் நேற்று நோன்பை தொடங்கினர். புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கொரோனா விதிகளை பின்பற்றி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 

நோன்பு காலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும் நாகூர் தர்காவில் குறைந்த அளவிலேயே தொழுகைக்கு வந்திருந்தனர். மதுரை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் இரவு நேர சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மகபூப்பாளையம், மேலூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், சோழவந்தான், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

இதே போன்று புதுச்சேரி மாநிலத்திலும் ரமலான் நோன்பு தொடங்கியது. பல்வேறு மசூதிகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு தொழுகையை மேற்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து