முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவுக்கு எதிரான மத்திய அரசின் முயற்சிகள் குறித்து ராகுல் கிண்டல்

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கையாண்ட முயற்சிகள் குறித்து துக்ளக் லாக்டவுன், மணி அடித்தல் என்று ராகுல் காந்தி கிண்டல் செய்து உள்ளார்.

 மத்திய அரசு  கொரோனா வைரஸ் பரவலை  கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து ராகுல் காந்தி டுவிட்டரில் கிண்டல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறையின் முதல் நடவடிக்கை, துக்ளக் லாக்டவுனை அமல்படுத்தியது. 2-வது நடவடிக்கை மணி ஓசை எழுப்பச் செய்தல், மூன்றாவதாக, கடவுளைத் துதி பாடுதல் எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கையாண்ட முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் டெல்லியை ஆண்ட துக்ளக் வம்சத்தை சேர்ந்த முகமது பின் துக்ளக் போன்று எதையும் திட்டமிடாமல் தன்னிச்சையாக இருப்பதாக ராகுல் காந்தி அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து