எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : ஐ.பி.எல் தொடரின் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. மில்லர், கிறிஸ் மோரிஸ் பங்களிப்பு அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.
ஐ.பி.எல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரீத்திவ் ஷா, ஷிகார் தவன் களமிறங்கினார்கள். சி.எஸ்.கே அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர். டெல்லி அணியில் மற்ற வீரர்கள் சொதப்பினாலும் கேப்டன் ரிஷப் பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடி 51 ரன்கள் சேர்த்தார்.
டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் உனட்கட் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர் டெல்லி வீரர்கள்.
ராஜஸ்தான் அணி 42 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. டேவிட் மில்லர் மட்டும் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் கொடுத்தார். 17-வது ஓவரை வோக்ஸ் வீச, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு சிக்ஸர் அடித்தார் உனத்கட். அப்போது ஆட்டத்தில் பரபரப்பு ஏறியது. 18 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டன. பந்த் அப்போது ஒரு ரன் அவுட்டை தவறவிட்டார். ஆனால் அது தான் அவர் போட்டியை தவறவிட்ட முக்கிய தருணம் என்பதை அவர் அப்போது உணரவில்லை.
ஆட்டத்தின் 19-வது ஓவர் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ரபாடா ஓவரில் முன்னணி பேட்ஸ்மேன்களே தடுமாறும் சூழலில் இரு சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார் மோரிஸ். இறுதி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை. பதற்றப்படாமல் இரு பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார் மோரிஸ். இதனை அடுத்து ராஜஸ்தான் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக 4-வது லீக் ஆட்டத்தின்போது ஒரு இமாலய ரன் சேஸிங்கில் கடைசி பந்துவரை போராடி பஞ்சாப்பிடம் கோட்டை விட்ட ராஜஸ்தான் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
தோல்விக்கு பிறகு பேசிய டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவிக்கையில்., இந்த ஆட்டத்தில் 15-20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம், ஆட்டத்தின் பிற்பகுதியில் பனித்துளி முக்கிய பங்கு வகித்தது என்றார்.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சுசாம்சன் தெரிவிக்கையில்., பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தான் எடுத்திருந்த நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக இருப்பதாகவும், அதே போட்டியை இன்னும் 100 முறை விளையாடினாலும், சிங்கிள் ரன் எடுக்க ஓடி இருக்க மாட்டேன் என சஞ்சுசாம்சன் தெரிவித்தார்.
முன்னதாக பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் அடித்தால் வெற்றி, நான்கு ரன்கள் எடுத்தால் ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் செல்லும் எனும் நிலையில், இறுதி ஓவரின் ஐந்தாவது பந்தில் பிடிவாதமாக ஒற்றை ரன் ஓடுவதற்கு மறுத்திருந்தார் சஞ்சுசாம்சன். அப்போது எதிர் முனையில் நின்றிருந்த கிறிஸ் மோரிஸ் முகத்தில் புன்னகை தவழவில்லை. கடைசி பந்தில் சாம்சன் அவுட் ஆக, நான்கு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது நினைவிருக்கலாம்.
அதிக தொகைக்கு ஏலம்
ஐ.பி.எல் வரலாற்றிலே அதிக தொகைக்கு ஏலம் போனவர் எனும் பெருமையை சமீபத்தில் பெற்றார் கிறிஸ் மோரிஸ். அவரை 16 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்துகளை சந்தித்து 4 சிக்ஸர்கள் விளாசி 36 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார் மோரிஸ்.
5-ம் இடத்துக்கு முன்னேற்றம்
3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வரும் திங்கள்கிழமை சந்திக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்
25 Apr 2024புதுடெல்லி, ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
-
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்
25 Apr 2024மும்பை, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.