முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே அணியில் இந்தியா - பாக்.: மல்லுகட்ட ஆரம்பித்த ரசிகர்கள்

சனிக்கிழமை, 17 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: உலக் கோப்பை டி-20 போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்தியாவின் கோலியா? பாகிஸ்தானின் பாபரா? என்று இணையத்தில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மல்லுகட்ட ஆரம்பித்துள்ளனர்.

ஐ.சி.சி வெளியீடு...

இந்தியாவில் நடைபெறவிருந்த டி 20 உலகக்கோப்பை போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகக் கோப்பை டி 20 போட்டிகளில் விளையாடவிருக்கும் அணிகள் குறித்த அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.

குரூப் - 1-ல்...

இதன்படி குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் குரூப் - ஏயில் முதலிடம் பிடிக்கும் அணியும், குரூப் - பியில் 2ம் இடம் பிடிக்கும் அணியும் இடம் பெற்றுள்ளன.

குரூப் - 2-ல்...

குரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் குரூப் - ஏயில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியும், குரூப் - பியில் முதல் இடம் பிடிக்கும் அணியும் இடம் பெற்றுள்ளன. 

ரசிகர்கள்...

இந்தியா, பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ளதால் போட்டிக்கான சுவாரஸ்யம் இப்போது ஆரம்பித்துவிட்டது.  இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் பல ட்வீட்களை பறக்கவிட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்தியாவின் கோலியா? அல்லது பாகிஸ்தானின் பாபரா? என்ற போட்டி ரசிகர்கள் இடைய இப்போதே ஆரம்பமாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து