முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதக்கம் வென்ற சிந்துவிற்கு தலைவர்கள் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 1 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி  ; டோக்கியோ ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து வெண்கலம் பதக்கம் வென்றார். இந்நிலையில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராகுல், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிவி சிந்து அர்ப்பணிப்பு, நிலைத்தன்மை, தலைசிறந்த ஆட்டம் ஆகியவற்றிற்கு புதிய அளவுகோலாகத் திகழ்வதாகத் தெரிவித்துள்ளார். அவருக்கு தனது இதயப் பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

சிந்து இந்தியாவின் பெருமைக்குரியவர், இந்தியாவின் மிகச்சிறந்த ஒலிம்பிக் போட்டியாளர்களில் ஒருவர் என புகழாரம் சூட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.   இந்தியாவிற்கு 2-வது பதக்கம் பெற்று தந்துள்ள சிந்துவிற்கு எனது வாழ்த்துக்கள் என ராகுல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பல்வேறு தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் சிந்துவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் பி.வி. சிந்துவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பி.வி.சிந்து இந்தியாவின் பெருமை என பாராட்டு தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து