முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பந்தை சேதப்படுத்தும் முயற்சியா? முன்னாள் வீரர் சேவாக் காட்டம்

திங்கட்கிழமை, 16 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லார்ட்ஸ்: இங்கிலாந்து அணி பந்து வீசிய போது அந்த அணி வீரர்கள் இருவர் பந்தை தங்களது ஸ்பைக் ஷூவுக்கு அடியில் வைத்து அழுத்துவது போன்ற காட்சியை கொரோனா முன்னெச்சரிக்கையா? பந்தை சேதப்படுத்தும் முயற்சியா? என்று இந்திய முன்னாள் வீரர் சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷூவுக்கு அடியில்... 

இந்திய கிரிக்கெட் அணி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் 2-வது இன்னிங்ஸில் (நான்காம் நாள் ஆட்டம்) இங்கிலாந்து அணி பந்து வீசிய போது அந்த அணி வீரர்கள் இருவர் பந்தை தங்களது ஸ்பைக் ஷூவுக்கு அடியில் வைத்து அழுத்துவது போன்ற செயல் கேமராவில் பதிவாகி இருந்தது. அதை பலரும் இங்கிலாந்து அணி பந்தை சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதா என கேள்வி எழுப்பினர்.

சேதப்படுத்துவது முறையா? 

இந்நிலையில் அப்படி கேள்வி எழுப்புபவர்கள் வரிசையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் இணைந்துள்ளார். “கொரோனா தடுப்பு முறை என சொல்லி கால்களுக்கு கீழே பந்தை வைத்து சேதப்படுத்துவது முறையா?” என இங்கிலாந்தை கேட்டுள்ளார் சேவாக். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து