எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் 24 மணி நேரத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தருவோம் என்று சொன்னோமா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நீட் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கேள்விகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்விற்கு எதிரான சட்ட முன்வடிவு தீர்மானம் பேரவையில் 1-2-2017 அன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் அனுமதியைப் பெற்று , இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 254/2ன்படி இந்தியக் குடியரசுத் தலைவருக்கு ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவர் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அனைவருக்குமே தெரிந்த செய்தி. 22-9-2017 அன்று உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற குறிப்பையும் திருப்பி அனுப்பியிருந்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காததையும், உள்துறை அமைச்சகம் சட்டமுடிவைத் திருப்பி அனுப்பியதையும் சட்டப்பேரவையிலே வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் எந்தவித அறிவிப்பும் இல்லாமல், அன்றைய அ.தி.மு.க. அரசாங்கத்தின் சட்டத்துறை சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் என்ன காரணத்தினால் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கேட்டு எழுதினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படி குடியரசுத் தலைவர் கேள்விகள் கேட்பதற்கு அப்பாற்பட்டவர் என்று தெரிந்தும்கூட காலத்தைக் கடத்துவதற்கே அன்றைக்கு அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்கள்.
இப்போது எங்களிடம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலும், அவர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய கடிதத்தின் நகலும், உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பிய கடிதத்தின் நகலும் இருக்கிறது. இதில் எந்த விதத்தில் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 24 மணி நேரத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே சொன்னதாக தவறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்றால், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்விற்கு எதிராக விலக்கு பெறுவதற்கு சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டு, அம்மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் 24 மணி நேரத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத்தருவோம் என்று சொன்னதாக பேரவையிலேயே தெரிவித்தார். அதற்கு முதல்வர் நீட் தேர்வு குறித்த தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதுபோலவே முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்விற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
5 டி-20 போட்டிகள் தொடர்: ஆஸ்திரேலியா சென்றடைந்த இந்திய இளம் வீரர்கள் அணி
24 Oct 2025பெர்த்: 5 டி-20 போட்டிகள் தொடரில் பங்கேற்க இந்திய இளம் வீரர்கள் அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
வருகிற 29-ந் தேதி....
-
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கிறார் விஜய்
24 Oct 2025சென்னை: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
ஆசிய இளையோர் கபடி இறுதிப்போட்டி: ஈரான் அணியை வீழ்த்திய இந்திய ஆடவர்-மகளிர் அணிக்கு தங்கம்
24 Oct 2025மனாமா: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 தற்போது பஹ்ரைனில் மனாமா நடைபெற்று வருகிறது.
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
24 Oct 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பீகாரில் என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமாரால் முதல்வராக முடியாது தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம்
24 Oct 2025பாட்னா: என்.டி.ஏ.
-
கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
24 Oct 2025நாகப்பட்டினம்: வடகிழக்கு மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
தி.மலை நீர் நிலைகளிலும், மலைப்பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
24 Oct 2025சென்னை: மலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
24 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச
-
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.


