முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரேநாளில் தங்கம் பவுனுக்கு 424 ரூபாய் விலை உயர்வு

வெள்ளிக்கிழமை, 5 நவம்பர் 2021      வர்த்தகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,000-க்கு விற்பனையானது.

தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. கடந்த 1-ந்தேதி தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.176 குறைந்து ரூ.35 ஆயிரத்து 576-க்கு விற்றது. இந்தநிலையில் நேற்று தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தொட்டது. சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.424 அதிகரித்து ரூ.36 ஆயிரத்துக்கு விற்றபனையானது. கிராமுக்கு ரூ.53 உயர்ந்து ரூ.4,500 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.68 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.60-க்கு விற்றபனையானது. தங்கம் விலையில் சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து சரிவு ஏற்பட்டு பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் செல்லும் நிலை இருந்தது. ஆனால் அதன் பின் விலை உயர்ந்து ஏற்றத்தாழ்வு இருந்து வந்ததால் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. இதற்கிடையே நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.424 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து