முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது: நாகை மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கொழும்பு : நாகை மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம் 13ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 23 மீனவர்களை கைது செய்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட அவர்களை பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் நேற்று மீண்டும் பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து