முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய நடைமுறைப்படி கல்குவாரிக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 14 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

சென்னை : புதிய நடைமுறையை மாற்றி, பழையபடி 15 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதத்திற்கு ஒருமுறையோ தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்‌ என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 2 மாதங்களாக கல்குவாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பர்மிட் முறையில் மாற்றம் செய்யப்பட்டது.  

மழைக் காலங்கள், பண்டிகைக் காலங்களில் கட்டுமானப் பொருட்களின் தேவை குறைவாக இருந்தாலும் அல்லது மற்ற மாதங்களில் அதிகமாக இருந்தாலும், அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், மொத்த ஆண்டு உற்பத்தியில், ஒரு மாதத்திற்கான சராசரி 1,000 யூனிட் ஜல்லியை உற்பத்தி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் புதிய நிபந்தனையை விதிப்பதாக, கல்குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.  மேலும், 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த பர்மிட் முறை தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை என்று மாற்றப்பட்டு உள்ளதாகவும் கல்குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். 

இதனால், 3 நாட்களுக்கு பர்மிட் வாங்கினாலும், மீதமுள்ள 2 நாட்களுக்கு மட்டுமே கட்டுமானப் பணிகளுக்கு ஜல்லியை உற்பத்தி செய்யவும், வாகனங்களில் கொண்டு செல்லவும் இயலும். 

எனவே, இந்த அரசு, உடனடியாக 3 நாட்களுக்கு ஒருமுறை பர்மிட் வழங்கப்படும் என்ற புதிய நடைமுறையினை மாற்றி, பழையபடி 15 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதத்திற்கு ஒருமுறையோ பர்மிட் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து