முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி வரை நம்முடன் கொரோனா இருக்கும்: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை: சவுமியா சுவாமிநாதன் தகவல்

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை என்றும் கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் என்றும் உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா 3-ம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை என்று தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் என்று தெரிவித்த அவர் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அனிமியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இனி அதிகரிக்கக்கூடும் என்றும் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து