முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவாலயத்துக்குள் புகுந்த கொள்ளை கும்பல்: தப்பிக்க ஓடியபோது கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

Source: provided

மன்ரோவியா : தேவாலயத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பலை கண்ட மக்கள் அஞ்சி தப்ப முயன்று வெளியே சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர். 

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா தலைநகர் மன்ரோவியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் புதன்கிழமை இரவு ஜெபக்கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது ஆயுதங்களுடன் ஒரு கும்பல் ஒன்று தேவாலயத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் கொள்ளையடிப்பதற்காக அங்கு புகுந்துள்ளனர்.

இதை பார்த்ததும் தேவாலயத்தில் இருந்த மக்கள் தப்பிக்க ஓடினார்கள். இதனால் அங்கு கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி மிதித்தபடி வெளியேறினர். இந்த கூட்டநெரிசலில் சிக்கி 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து