முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் தொடர்பாக இந்தியா-ஆஸி. இடையே ஒப்பந்தம் கையெழுத்து

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2022      இந்தியா
Piyush-Goyal 2022 04 02

Source: provided

புதுடெல்லி : இந்தியா ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலியா வர்த்தகத்துறை மந்திரி டான் டெஹான் ஆகியோர் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து  பிரதமர் மோடி கூறியிருப்பதாவது, “இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பரஸ்பர நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வதைக் காட்டும் இந்த ஒப்பந்தம், மிகவும் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த ஒப்பந்தம், இருநாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையை வெளிக்காட்டியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தால், இருநாடுகளுக்கும் இடையேயான  வர்த்தகம் அதிகரிக்கும்.

இந்த ஒப்பந்தம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் விநியோகச் சங்கிலி பின்னடைவை வலுப்படுத்தும். இரு நாடுகளுக்கும் இடையே மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டத்தை எளிதாக்கும்” என்று பிரதமர் மோடி கூறினார். 

இருநாடுகளுக்கிடையேயான உறவில் இது மேலும் ஒரு மைல்கல் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் குறித்து மந்திரி பியூஷ் கோயல் கூறியிருப்பதாவது,  “நாங்கள் வர்த்தக தடைகளை நீக்குகிறோம், இந்த ஒப்பந்தம்,  எதிர்காலத்தில் வர்த்தகத்தை இரட்டிப்பாக்க வழிவகுக்கும். இது தொழிலாளர் சார்ந்த துறைகளுக்கு பெரும் ஆற்றலைக் கொண்டிருக்கும் ஒப்பந்தமாகும்.

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், அடுத்த ஐந்தாண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை, தற்போதுள்ள 2700 கோடி அமெரிக்க டாலரில் இருந்து கிட்டத்தட்ட 45-50 கோடி அமெரிக்க டாலராக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த நான்கைந்து ஆண்டுகளில், இந்தியாவில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. மேலும், இந்திய சமையல் கலைஞர்கள் மற்றும் யோகா பயிற்றுவிப்பாளர்களுக்கு வரும் காலத்தில் பல புதிய வாய்ப்புகள் ஏற்படும்.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறித்தும் இரு தரப்பும் விவாதித்தோம். ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான, பணி விசா மற்றும் விடுமுறை விசா ஏற்பாட்டைப் பார்த்து வருகிறோம். 2-4 ஆண்டுகள் வரையிலான படிப்புகளுக்குப் பிந்தைய பணி விசா, இந்திய மாணவர்களுக்குக் கிடைக்க ஏற்பாட்டை செய்து வருகிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து