முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர் இந்தியாவின் புதிய சி.இ.ஓ.-வாக கேம்ப்பெல் வில்சன் நியமனம்

வியாழக்கிழமை, 12 மே 2022      இந்தியா
Campbell-Wilson-2022-05-12

 டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.வாக கேம்ப்பெல் வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலத்தில், டாடா குழுமம் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, ஏர் இந்தியாவை, டாடா சன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. இந்நிலையில் ஏர் இந்தியா தனது நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியாகவும் (சி.இ.ஓ), நிர்வாக இயக்குநராகவும் நியூசிலாந்தை சேர்ந்த கேம்ப்பெல் வில்சனை (வயது 51) நியமித்துள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த கேம்ப்பெல் வில்சன் இதற்கு முன் சிங்கப்பூரில் உள்ள ஸ்கூட் விமான சேவை நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவர். மேலும் இவர் குறைந்த செலவில் இயக்கப்படும் விமானங்களை நிர்வாகம் செய்வதில் தேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து