முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யப் படையினர் தீவிரம்

சனிக்கிழமை, 28 மே 2022      உலகம்
Ukraine 2022-05-28

கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யப் படையினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 3 மாதங்களை எட்டியுள்ளது. தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை தாக்கி அழித்துள்ள ரஷ்யப் படை தற்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகிறது.  உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்யப் படையினர் முகாமிட்டுள்ளனர். கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள லிமான் நகரை ரஷ்யப் படையின் கைப்பற்றியுள்ளது உறுதியாகியுள்ளது.  

மேலும், லுஹான்ஸ்க் மற்றும் டொனட்ஸ்க் பகுதி முழுவதையும் கைப்பற்ற ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.  இதையடுத்து கிழக்கு உக்ரைனில் ரஷ்யப் படையினரின் தாக்குதலுக்கு உக்ரைன் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து