முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு விவகாரம்: அண்ணாமலை கருத்து

சனிக்கிழமை, 28 மே 2022      அரசியல்
Annamalai 2022 04 12

நீட் தேர்வு தொடர்பான தி.மு.க.வின் அரசியலுக்கு தமிழக மாணவர்களிடம் நேரமில்லை என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

2022-ம் நீட் தேர்வு எழுத அதிக அளவு மாணவர்கள் விண்ணப்பித்துள்ள மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதைக் குறிப்பிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாலை கருத்து ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.  அந்தப் பதிவில், நீட் தேர்வுக்கு அதிக அளவு விண்ணப்பித்து முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பதில் அளித்துள்ளனர். தி.மு.க.வின் அரசியலுக்கு தமிழக மாணவர்களிடம் நேரமில்லை என்று தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து