முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: டெல்லி உள்பட 4 மாநிலங்களில் மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

வியாழக்கிழமை, 9 ஜூன் 2022      இந்தியா
corona-2022-06-02

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டில் டெல்லி, மகாராஷ்டிரா உள்பட 4 மாநிலங்களில் மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அடுத்த அலை எழுமோ என்ற அச்சம் மெல்ல எழும் அளவுக்கு நாள்தோறும் கொரோனா பாதிப்பு சப்தமில்லாமல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா அதிகரிக்கவில்லை என்பதும், ஒரு சில மாநிலங்களில்தான் அதிக பாதிப்பு இருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அவ்வாறு, கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், டெல்லி உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு ஏற்கனவே பல்வேறு அறிவுறுத்தல்களை அனுப்பியிருக்கும் மத்திய சுகாதாரத் துறை, தற்போது அங்கு மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

கொரோனா பரிசோதனை அதிகரித்தல், கொரோனா உறுதி செய்யப்படுபவர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து தொடர் நிகழ்வுகளில் மாநில சுகாதாரத் துறைகள் கவனம் செலுத்துகிறதா என்றும் கண்காணிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து