முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: மாணவர்களை வரவேற்க தூய்மை பணிகள் தீவிரம்

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      தமிழகம்
School-Education 2022 02 11

Source: provided

சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை 13-ம் தேதி திறக்கப்படவிருக்கும் நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டிருக்கிறது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விடுத்துள்ள அறிவிப்பில், தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அனைத்துப் பள்ளிகளையும் தூய்மைப் பணிகளை முடித்து மாணவர்களை வரவேற்க தயார்படுத்த வேண்டும்.  மேலும், பள்ளிகளில் மின் இணைப்புகளில் மின் கசிவு, மின் கோளாறுகள்  ஏதேனும் இருக்கிறதா என்று என்று சோதனை நடத்தி, அவ்வாறு இருந்தால் சீர் செய்ய வேண்டும். 

சத்துணவுக் கூடங்களை சுத்தப்படுத்தி, சுகாதாரமாண உணவு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.   பள்ளிகள் திறந்ததும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட நூல்கள் பெறப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.   

பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் முறையான சோதனைக்கு உள்படுத்தப்பட்டு, தகுதிச் சான்றிதழ் பெற்ற பிறகே மாணவ, மாணவிகளை அழைத்து வரப் பயன்படுத்தப்பட  வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து