எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : மகாராஷ்டிரா, கர்நாடக உள்ளிட்ட 4 மாநிலங்களில் 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க. 8 இடங்களையும், காங்கிரஸ் 5 இடங்களை கைப்பற்றியது. தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, சுயேட்ச்சை தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றது.
மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு தாமதமான மகாராஷ்டிராவிலும் ஹரியானாவிலும் பாஜக பெற்றுள்ள வெற்றிகள், சிவசேனாவுக்கும் காங்கிரஸுக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். ஹரியாணாவில் பாஜக வேட்பாளர் ஒருவரும், பாஜக ஆதரவு சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர்.
தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ல் தேர்தல் நடக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 இடங்களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இதையடுத்து, மீதமுள்ள 16 இடங்களுக்கு போட்டி இருந்ததால் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையம் செய்திருந்தது.
அதன்படி, கர்நாடகாவில் 4, ஹரியாணாவில் 2, ராஜஸ்தானில் 4, மகாராஷ்டிராவில் 6 இடங்கள் என மொத்தம் 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரவு 7 மணிக்கு முடிவுகள் தெரிந்து விடும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.ஆனால், ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பல எம்எல்ஏக்கள் கட்சி மாறிவாக்களித்த நிகழ்வுகள் நடந்தன. இதனால் கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.
ராஜஸ்தான்...
ராஜஸ்தானில் இரவு 7 மணிக்கு பிறகு ராஜஸ்தான் மாநில முடிவுகள் வெளிவரத் தொடங்கின. அங்கு தேர்தல் நடந்த 4 இடங்களில் 3-ல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு இடத்தை பா.ஜ.க. வேட்பாளர் கைப்பற்றினார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முகுல் வாஸ்னிக், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்திருந்தனர். பா.ஜ.க. சார்பில் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றார். 2-வதாக நிறுத்தப்பட்ட பாஜக வேட்பாளர் சுபாஷ் சந்திரா தோல்வி கண்டார்.
கர்நாடகா...
கர்நாடகாவில் 4 இடங்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சார்பில் மொத்தம் 6 பேர் போட்டியிட்டனர். பா.ஜ.க. சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோர் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில்குபேந்திர ரெட்டியும் போட்டியிட்டனர்.
இரவு 9 மணி அளவில் கர்நாடகாவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 4 இடங்களில் பா.ஜ.க. 3 இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர் சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றார்.
மகாராஷ்டிரா:
நள்ளிரவில் வெளியான முடிவுகளில் பா.ஜ.க. நிறுத்திய 3 வேட்பாளர்களுமே வெற்றி பெற்றனர். இது சிவசேனாவுக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலா ஓர் இடத்தை வென்றன. பாஜக சார்பில் களம் கண்ட மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், அனில் பாண்டே மற்றும் தனஞ்சய் மாதிக் ஆகியோர் வெற்றி பெற்றனர். சிவசேனா களமிறக்கிய இருவரில் சஞ்சய் ரவுத் மட்டும் வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் இம்ரான் பிரதாப்காதி வெற்றி பெற்றார். தேசிய வாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரபுல் படேல் வெற்றி கண்டார்.
ஹரியானா:
காங்கிரஸுக்கு ஹரியானாவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மொத்தமுள்ள 2 இடங்களில் பாஜகவின் கிரிஷன் லால் பன்வார் மற்றும் பாஜக ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்தத் தேர்தலில் தோல்வியுற்ற காங்கிரஸின் அஜய் மக்கான், "இது மலிவான அரசியல். இந்தியாவில் இன்னும் ஜனநாயகம் உயிரோடு இருக்கிறதா?" என்று ட்வீட் செய்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்
25 Apr 2024புதுடெல்லி, ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
-
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்
25 Apr 2024மும்பை, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.