முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் மகளிர் சுய உதவி குழுக்களின் மதி வார சந்தை : வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      தமிழகம்
Weekly-market 2022-06-19

Source: provided

சென்னை : மகளிர் சுய உதவிக்குழுக்களின் மதி வார சந்தை ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் நடக்கிறது. 

தமிழகம் முழுவதும் உள்ள 7 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஏராளமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு மாதத்துக்கு 2 நாட்கள் அவர்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு ஏதுவாக, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ஏற்பாடு செய்து கொடுக்கிறது. தற்போது அந்த சந்தையை ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு மதி வார சந்தை என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. 

அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறுதானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள், எண்ணெய் வகைகள், தின்பண்டங்கள், ஊறுகாய் வகைகள், துணிப்பை மற்றும் சணல் பைகள் என அவர்கள் தயாரித்த, விளைவித்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.  காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த சந்தை இங்கு செயல்பட இருக்கிறது. 

இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்றன. இப்படியாக ஒவ்வொரு வாரம் சில மாவட்டங்களின் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் சுழற்சி முறையில் கலந்து கொண்டு தாங்கள் தயாரித்த, விளைவித்த பொருட்களை விற்பனை செய்யவுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து