முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கருமுட்டை விவகாரம்: சிறுமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

புதன்கிழமை, 29 ஜூன் 2022      தமிழகம்
Erode-black-egg 2022 06 29

Source: provided

ஈரோடு : ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது. 

ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் செயற்கை கருவூட்டலுக்காக 16 வயது சிறுமியின் கருமுட்டைகள் தானமாக பெறப்பட்டதாகவும், சட்டத்துக்குப் புறம்பாக இந்த கருமுட்டை விற்பனை நடந்ததாகவும் புகார்கள் வந்தன.

இது தொடர்பாக சிறுமியின் தாய், அவரது 2வது கணவர், தரகர் மற்றும் போலி ஆதார் அட்டை வழங்கியவர் என 4 பேரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து பல கட்ட விசாரணைகள் நடந்து வருகிறது. அரசு சார்பில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை சார்பிலும் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது. அரசு காப்பகத்தின் பாத்ரூம் சுத்தம் செய்யும் ரசாயனத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து சிறுமி ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து