முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா : தனியார் மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2022      சினிமா
Mani-Ratnam 2022-07-19

Source: provided

சென்னை : பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பானது சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை என பல துறைகளில் தடம் பதித்த இவர் மௌன ராகம், நாயகன், ரோஜா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தற்போது நீண்ட நாள் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார். அதன் முதல் பாகம் வெளியீடு வேலைகளில் பிசியாக இருந்த இயக்குநர் மணிரத்னத்திற்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் லேசான அறிகுறி இருந்ததை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து