முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மாயம்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2022      உலகம்
Pak-Helicopter 2022-08-03

Source: provided

கராச்சி : மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவ ஹெலிஹாப்டர் ஒன்று மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். நாட்டின் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பலுசிஸ்தான், சிந்து, கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவ ஹெலிஹாப்டர் ஒன்று நேற்று முன்தினம் மாயமானதாக தகவல் வெளியானது. அந்த ஹெலிஹாப்டரில் நிவாரணப் பணிகளை மேற்பார்வை செய்து வரும் கமாண்டர் ஜெனரல் சர்ப்ராஸ் அலி மற்றும் 5 மூத்த ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

பலுசிஸ்தானின் லாஸ்பேலாவில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மாயமானதாகவும் அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடந்து வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து