முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் அதிகரித்த ஒருநாள் தொற்று: இந்தியாவில் 15,754 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022      இந்தியா
corona------------2022-08-18

இந்தியாவில் ஒரே நாளில் 15,754 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மூலம் மீண்டும் அதிகரித்துள்ளது ஒருநாள் பாதிப்பு.

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் ஒரே நாளில் 15,754 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் 12,608 ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 15,754 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 15,220 பேர் குணமடைந்ததால் இந்தியாவில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4,36,85,535 ஆனது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,01,343 லிருந்து 1,01,830 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக பதிவானது. இந்தநிலையில், ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 253 பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,09,27,32,604 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 31,52,882 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து