முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் புதிதாக 5,383 பேருக்கு தொற்று: கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      இந்தியா
India-Corona 2022 03 15

Source: provided

புதுடெல்லி : கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பில் இருந்து 6,424 பேர் மீண்டு வீடு திரும்பினர். இந்தியாவில் புதிதாக 5,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 5,443 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,383 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 2,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு பிறகு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 55 ஆயிரத்து 837 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 6,424 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 84 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 45,281 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்று முன்தினத்தை விட 1,061 குறைவாகும். கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 8 மரணங்கள் உள்பட நாடு முழுவதும் மேலும் 20 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,449 ஆக அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து