முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீர் பிரச்சினை, சாலை வசதி குறித்து கேள்வி: கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளியேறிய அமைச்சர் பொன்முடி

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      தமிழகம்
Ponmudi 2022 09 06

Source: provided

விழுப்புரம் : குடிநீர் பிரச்சினை, சாலை வசதி குறித்து பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் கிராமசபை கூட்டத்தில் இருந்து பாதியிலேயே அமைச்சர் பொன்முடி வெளியேறினார்.

தமிழகம் முழுவதும் நேற்று காந்தி பிறந்த நாளையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலும் நடைபெற்றது. வீரபாண்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் அரசு அதிகாரிகள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

அப்போது கிராம மக்கள் அமைச்சர் பொன்முடியிடம் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி குறித்து சராமாரியாக கேள்வி கேட்டனர். தொடர்ந்து மக்கள் கேள்வி கேட்டதால் அமைச்சர் பொன்முடி கிராம சபை கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து