முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திர கிரகணத்தையொட்டி மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 8-ம் தேதி நடை அடைப்பு

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2022      ஆன்மிகம்
Meenakshi-Amman 2022-11-04

சந்திர கிரகணத்தையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 8-ம் தேதி நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சந்திர கிரகணம் வருகிற 8-ம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை நடைக்கிறது. இந்த நிலையில், சந்திர கிரகணத்தையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 8-ம் தேதி நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

சந்திரகிரகணம் வருகிற 8-ம் தேதி மதியம் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணி வரை நடக்கிறது. அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை 9.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பலகனி கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டு இருக்கும். மேலும் அன்றைய தினம் அன்னாபிஷேகம் காலை 7 மணிக்கு நடைபெறும். இரவு 7.30 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த 22 உபகோவில்களில் இதே நேரத்தில் நடை அடைக்கப்படும். இதற்கிடையில் வருகிற 7-ம் தேதி கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து