முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எல்லைக்குள் ஊடுருவல்: பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      இந்தியா
Kashmir 2022-07-09

Source: provided

ஜம்மு : ஜம்முவில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். 

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களை தடுக்கும் விதமாக ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் திவீர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஜம்மு மாவட்டம் ஆர்.எஸ். புரா பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே நேற்று எல்லைப்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பாகிஸ்தானில் இருந்து ஒரு நபர் இந்திய எல்லைக்குள் நுழைவதை பாதுகாப்பு படையினர் கண்டனர்.

இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்த நபரை சுட்டு வீழ்த்தினர். இதனால், இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்த பாகிஸ்தானியரின் செயல் முறியடிக்கப்பட்டது. சுடப்பட்ட பாகிஸ்தானியர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து