தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குஜராத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிற 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. பிரதமர் மோடியும், தலைவர்களும் தீவிர ஓட்டு வேட்டையாடினர்.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள குஜராத் சட்டசபை தேர்தல் பிரசார களம், களை கட்டி வருகிறது. அங்கு 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1-ந் தேதி, 5-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1-ந் தேதி தேர்தல் நடப்பதால், அங்கெல்லாம் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது.
வழக்கமாக பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நடைபெற்று வந்த குஜராத்தில், இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
89 தொகுதிகளில் 1-ம் தேதி நடக்கிற முதல் கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. இவர்களில் 167 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 100 பேர் மீது கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஏ.டி.ஆர். என்னும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி 88 இடங்களில் போட்டியில் உள்ளது. இந்த 88 வேட்பாளர்களில் 36 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி 89 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அந்த வேட்பாளர்களில் 35 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. 89 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள பா.ஜ.க.வில், 16 சதவீத வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
முதல் கட்ட தேர்தலில் வைர நகரம் என்று அழைக்கப்படுகிற தொழில் நகரான சூரத் முக்கிய இடம் பிடிக்கிறது. இங்கிருந்து 12 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்கிறார்கள். முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற இந்த சூரத்தில் பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி ஓட்டு வேட்டையாடினார். அவர் சூரத் விமான நிலையத்தில் இருந்து மோட்டா வரச்சா என்ற இடம் வரையில் 25 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடத்தி ஆதரவு திரட்டினார். அதைத் தொடர்ந்து அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
மேலும் அவர் பாரூச் மாவட்டத்தில் உள்ள நேட்ராங்க், கெடா மாவட்டத்தின் மெகமதாபாத் ஆகிய நகரங்களிலும் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். கெடா மாவட்டத்தில் மெகமதாபாத்தில் அவர் பேசும்போது, "ஜனநாயகம் வலிமை பெற அதிக எண்ணிக்கையிலானவர்கள் வாக்கு அளிக்க வேண்டும். ஜனநாயகம் வலுவானால், நாம் அனைவரும் வலிமை பெற முடியும்" என தெரிவித்தார்.
பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்துகிற நர்மதா மாவட்டத்தின் டெடியாபடா நகரில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் கார்கே ஓட்டு வேட்டையாடினார். அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர் பிரதமர் மோடியையும், உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சாடினார்.
காங்கிரசுக்காக சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், பாலிடானா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். ஆம் ஆத்மிக்காக, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சூரத்தில் முற்றுகையிட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். அவர் அங்கு ஜவுளித்தொழில் அதிபர்கள் மற்றும் ரத்தினக்கல் கைவினைஞர்களுடன் டவுன்ஹால் சந்திப்புகளை நடத்தி தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு வேட்டையாடினார். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் இன்று (29-ந் தேதி) மாலை தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை வறுவல்![]() 1 day 18 hours ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 4 days 14 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 1 day ago |
-
22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
05 Feb 2023சென்னை : காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் வித
-
சேலை வழங்கும் நிகழ்வில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
05 Feb 2023சென்னை : வாணியம்பாடியில் சேலை வழங்கும் நிகழ்வில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.
-
இந்திய அணியை எதிர்கொள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் தயாராக உள்ளனர் : ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்
05 Feb 2023பெங்களூரு : இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு
05 Feb 2023புதுடெல்லி : சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மனு தாக்கல் செய்யும் பணி நாளை முடிவுக்கு வருகிறது : 10-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
05 Feb 2023மதுரை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடந்து வரும் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி நாளை 7-ம் தேதி முடிவுக்கு வருகிறது.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மகாபாரத கிருஷ்ணரோடு ஸ்டாலினை ஒப்பிட்டு கே.எஸ்.அழகிரி கூறிய உவமை
05 Feb 2023கும்பகோணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ணர் தேரை ஓட்டி, மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்தது போல், அவர் எங்களுக்குக் கொடுத்து கொண்டிருக்கின்றார் எ
-
பொதுத்தேர்வு எழுதவுள்ள 11-ம் வகுப்பு மாணவர்கள் 10-ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
05 Feb 2023சென்னை : பொதுத்தேர்வு எழுதவுள்ள 11-ம் வகுப்பு மாணவர்கள் வரும் 10-ம் தேதிக்குள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அக்னிபாத் வீரர் பணியிடங்களுக்கு இனிமேல் முதலில் நுழைவுத்தேர்வு : ராணுவ வட்டாரங்கள் தகவல்
05 Feb 2023புதுடெல்லி : அக்னிபாத் வீரர் பணியிடங்களுக்கு இனி மேல் முதலில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடகாவில் ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
05 Feb 2023பெங்களூரு : கர்நாடகாவிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி துமகூருவில் எச்.ஏ.எல்.
-
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் காலமானார்
05 Feb 2023இஸ்லமபாத் : பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் காலமானார். அவருக்கு வயது 79.
-
சுப்ரீம் கோர்ட்டுக்கு கொலிஜியம் பரிந்துரைத்த 5 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு : தலைமை நீதிபதி பதவிபிரமாணம் செய்து வைக்கிறார்
05 Feb 2023புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டுக்கு கொலிஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
-
குஜராத்தின் மோா்பி பால விபத்து: 9 பேரின் ஜாமீன் மனு நிராகரிப்பு
05 Feb 2023காந்திநகர் : குஜராத்தின் மோர்பியில் நிகழ்ந்த பால விபத்தில் கைதான 9 பேரின் ஜாமின் மனுக்களை கோர்ட் நிராகரித்து விட்டது.
-
காற்றில் கலந்தது கானக்குயில்: 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதைக்கு பின் வாணி ஜெயராம் உடல் தகனம்
05 Feb 2023சென்னை : மறைந்த பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது.
-
கூட்டு பாலியல் வன்கொடுமை: அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
05 Feb 2023போர்ட் பிளேயர் : கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா : சீனா கண்டனம்
05 Feb 2023வாஷிங்டன் : அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் : மேகாலயா முதல்வர் தேர்தல் வாக்குறுதி
05 Feb 2023ஷில்லாங் : தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மேகாலயா முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார
-
நிதி மோசடி வழக்கு: ராகுல் காந்தியின் நண்பரிடம் அமலாக்கத்துறை விசாரணை
05 Feb 2023புதுடெல்லி : நிதி மோசடி வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியின் நண்பரிடம் அமலாக்க துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
-
குடிபோதையில் மனைவி மீது தாக்குதல்: கிரிக்கெட் வீரர் காம்ப்ளிக்கு நேரில் ஆஜராக பாந்த்ரா போலீஸ் நோட்டீஸ்
05 Feb 2023மும்பை : குடிபோதையில் மனைவியை தாக்கிய புகாரில் கிரிக்கெட் வீரர் காம்ப்ளி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி பாந்த்ரா போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
குஜராத் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் டீலக்ஸ் ஏ.சி. சுற்றுலா ரயில் : இந்தியன் ரயில்வே அறிமுகம்
05 Feb 2023புதுடெல்லி : குஜராத் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தியன் ரயில்வே, டீலக்ஸ் ஏ.சி. சுற்றுலா ரயிலை அறிமுகம் செய்கிறது.
-
அதிகாரபூர்வ வேட்பாளரை கட்சியின் பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
05 Feb 2023சென்னை : அதிகாரபூர்வ வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீ்ர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் : ஆய்வுக்குப் பின் அமைச்சர் அறிவிப்பு
05 Feb 2023தஞ்சாவூர் : டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று ஆய்வுக்குப் பின் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
இன்று முதல் 9-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை : ஆய்வு மையம் தகவல்
05 Feb 2023சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை : பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
05 Feb 2023இஸ்லாமாபாத் : ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
-
ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும் : கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
05 Feb 2023சென்னை : ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
வரும் 18-ம் தேதி கூடுகிறது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
05 Feb 2023புதுடெல்லி : ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி நடைபெற்றது.