முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் பணிகளுக்கு போலீசார் இடையூறு ஏற்படுத்தக்கூடாது : டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2023      தமிழகம்
Silenthra-Babu 2022 01 02

Source: provided

சென்னை : விவசாய டிராக்டர்களை பறிமுதல் செய்யும் விவகாரத்தில் போலீசார் வேளாண் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக கிராமப் புறங்களில் விவசாயப் பணிகளுக்காக வேலை ஆட்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர்களை வாகன தணிக்கையின் போது போலீசார் பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஒப்படைத்து விடுவதாகவும் அதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு விவசாய அமைப்புகளால் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 

வாகன தணிக்கையின் போது டிராக்டர்களில் விவசாய பணிகளுக்காக செல்லும் விவசாய தொழிலாளர்களை காத்திருக்க வைக்கப்படுவதாகவும், இதனால் நாற்று நடுதல், அறுவடை போன்ற முக்கிய விவசாயப் பணிகளை உரிய நேரத்தில் கவனிக்க இயலாமல் போவதோடு, தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே மாநகர போலீஸ் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள், வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் அலுவலர்களுக்கு இது தொடர்பாக தேவையான அறிவுரைகளை வழங்கி, விவசாயப் பணிகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து