இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள 'இளைய ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனது கையொப்பமிட்ட விண்ணப்பத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அ.தி.மு.க. வேட்பாளரை பொதுக்குழுவை கூட்டி இறுதி செய்ய வேண்டும் என்றும், வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவை தேர்தல் ஆணையத்திற்கு அவைத் தலைவர் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த வாரம் அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அதில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களது தரப்பில் தனியாக வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். ஆனால், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக் கூடிய விண்ணபத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே, இந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டது.
ஜனவரி 30-ம் தேதியன்று, தனது கையொப்பமிட்ட விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஓ. பி.எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் நேற்று முன்தினம் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்பது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே, வேட்புமனுவை ஏற்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார்.
மேலும், யார் கட்சியின் பொறுப்பாளராக இருப்பவர்களின் கையெழுத்து அங்கீகரிக்கப்படுவது என்பதுதான் விதி. அதன் அடிப்படையில் அ.தி.மு.க.வின் பொறுப்பாளர் என்ற முறையில் ஆவணத்தில் இருக்கும் கையெழுத்து ஏற்கப்படும். இந்த விவகாரத்தில் இன்னும் விரிவான பதிலை சுப்ரீம் கோர்ட் எதிர்பார்த்தால் அதனை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதே போல் ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது. மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து விவகாரங்களும் அடங்கியுள்ள நிலையில், இடைக்கால மனு என்பது விசாரணைக்கு உகந்தது அல்ல.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் காலாவதியாகி விட்டது என்பதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு மூலமே மேற்கண்ட பதவிகள் ரத்தாகி விட்டதா, இல்லையா என்பது முடிவாகும். அதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் அதிகாரம் கேட்டு உரிமை கோர முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இ.பி.எஸ், ஒ.பி.எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தற்போது உள்ள நிலவரப்படி பார்த்தால் இரு தரப்பு வேட்பாளரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்படலாம். இருவரும் பேசி முடிவெடுக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். இதற்கு, எங்கள் வேட்பாளரை ஓ.பி.எஸ் ஏற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு வலியுறுத்த, இல்லை, இல்லை பொது வேட்பாளரைத்தான் ஏற்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஓ பன்னீர்செல்வம் தரப்பு பதில் அளித்தது.
இரு தரப்பினருமே கையெழுத்திட வேண்டாம். நாங்களே உத்தரவு பிறப்பிக்கிறோம் என்றும், இரு தரப்பினருமே முரண்டு பிடிக்கிறீர்கள். நாங்கள் சில தீர்வுகளை கொடுக்க விரும்புகிறோம் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், நாங்கள் முக்கிய முடிவுகள் எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய், அ.தி.மு.க. வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.திமுக வேட்பாளரை நிறுத்துவதற்கு இடைக்கால ஏற்பாடாக இந்த உத்தரவை பிறப்பிக்கிறோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை அ.தி.மு.க. பொதுக்குழு முடிவு செய்யலாம். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத் தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர்களை சேர்த்து இந்த பொதுக்குழுவை கூட்டவேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் இந்த இடைக்கால ஏற்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என கூறினர். மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய 7 -ம் தேதி இறுதி நாளாக இருக்கும் போது இதில் என்ன முடிவெடுப்பது. இந்த விவகாரத்தில் பிறப்பிக்கப்படும் எந்த உத்தரவும் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிபதிகள் கூறினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அ.தி.மு.க.வில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் என இரு அணிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் என்னவாகும் என்கிற கேள்விக்கு விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொதுக்குழு முடிவு செய்யும் என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பாக தீர்ப்பளித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளை கிழங்கு புட்டு![]() 2 days 12 hours ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 5 days 11 hours ago |
குடைமிளகாய் பருப்பு மஸ்ரூன்![]() 1 week 2 days ago |
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு : ஐகோர்ட்டில் நாளை விசாரணை
20 Mar 2023சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
கண்ணை நம்பாதே விமர்சனம்
20 Mar 2023இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற திரில்லர் படத்தின் இயக்குநர் மாறனின் மற்றொரு கிரைம் திரில்லர் படம் தான் கண்ணை நம்பாதே.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-20-03-2023.
20 Mar 2023 -
மகளிர் ஐ.பி.எல். போட்டி: உ.பி.வாரியர்ஸ் 3 - வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்
20 Mar 2023மும்பை : நடப்பு மகளிர் ஐ.பி.எல். போட்டியில் உ.பி.வாரியர்ஸ் குஜராத்தை வீழ்த்தி 3 - வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றியது.
-
இம்ரானின் கட்சியை தடை செய்ய சட்ட ஆலோசனை : பாக். உள்துறை அமைச்சர் தகவல்
20 Mar 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இம்ரானின் கட்சியை தடை செய்ய விரைவில் சட்ட ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
செங்களம் பர்ஸ்ட் லுக் வெளீயீடு
20 Mar 2023செங்களம் எனும் இணைய தொடரின் பர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. எஸ். ஆர்.
-
குடும்ப அட்டைதாரர்கள் 2.2 கோடி பேருக்கும் ரூ. ஆயிரம் உரிமை தொகை வழங்க அண்ணாமலை வலியுறுத்தல்
20 Mar 2023சென்னை : குடும்ப அட்டைதாரர்கள் 2.2 கோடி பேருக்கும் ஆயிரம் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
-
ஷூட் தி குருவி விமர்சனம்
20 Mar 2023மங்களூரில் உள்ள கல்லூரியில் பிரபல ரவுடியான குருவி ராஜன் பற்றி மாணவர்கள் ஆராய்ச்சி செற்கிறார்கள்.
-
ஏப்ரல் 7-ல் வெளியாகிறது ஆகஸ்ட் 16, 1947
20 Mar 2023ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் ஆகஸ்ட் 16, 1947.
-
80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உரிமைத்தொகை திட்டத்தில் பலன் அடைய வாய்ப்பு: அமைச்சர் கீதாஜீவன்
20 Mar 2023சென்னை : உரிமை தொகை திட்டத்தில் 80 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பலனடைய வாய்ப்புள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
-
ராஜா மகள் விமர்சனம்
20 Mar 2023மகளின் ஆசையை நிறைவேற்ற படாத பாடும் ஒரு பாசத்தந்தையின் கதையே இந்த ராஜா மகள். செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடையை நடத்தி வருகிறார் ஆடுகளம் முருகதாஸ்.
-
கோஸ்டி விமர்சனம்
20 Mar 2023முழுக்க நகைச்சுவைக்கு முக்கியம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் கோஸ்டி.
-
கோபத்தில் இருந்தேன் - வரலட்சுமி
20 Mar 2023நடிகர் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் கொன்றால் பாவம்.
-
அனைத்து பெண்களுக்கும் ரூ. ஆயிரம் தருவதுதானே தி.மு.க.வின் வாக்குறுதி : உரிமைத் தொகை குறித்து இ.பி.எஸ். விமர்சனம்
20 Mar 2023சென்னை : தி.மு.க.
-
டி3 விமர்சனம்
20 Mar 2023மருத்துவர் ஒருவர் செய்யும் சட்ட விரோதமான செயல்களை புலனாய்வு செய்து வெளிக்கொண்டு வரும் ஒரு காவல் ஆய்வாளரின் அனுபவம் தான் இந்த டி3 படக்கதை.
-
2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார்: ஜப்பான் பிரதமர் கிஷிடாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை : இருநாட்டு உயர்மட்ட குழு ஆலோசனை
20 Mar 2023புதுடெல்லி : ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
தமிழகத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு 144 கோடி ரூபாய் மானியம்: பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு
20 Mar 2023தமிழகத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மானியம் அளிப்பதற்காக வரும் நிதி ஆண்டில் ரூ.144 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நித
-
தமிழக பட்ஜெட் - முக்கிய அம்சங்கள்
20 Mar 2023தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று காலை தாக்கல் செய்யப்பட்டது.
-
கப்ஜா விமர்சனம்
20 Mar 2023விமானப்படை வீரரான உபேந்திரா சந்தர்ப்பவசத்தால் மிகப்பெரிய
-
சூர்யகுமாருக்கு பதில் சாம்சனுக்கு வாய்ப்பு தரலாம்: வாசிம் ஜாபர்
20 Mar 2023ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி விக்கெட்டை இழந்திருந்தார் சூர்யகுமார் யாதவ்.
-
சென்னையில் 2 நாட்கள் நடைபெறுகிறது: 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
20 Mar 2023சென்னை : உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 நாட்களில் சென்னையில் நடத்தப்பட உள்ளது.
-
சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலில் பாகிஸ்தான் முன்னிலை
20 Mar 2023கான்பெரா : சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை முன்னிலையில் உள்ளன.
-
1000 புதிய பஸ்கள் கொள்முதல்: போக்குவரத்துத் துறைக்கு ரூ.8,056 கோடி நிதி ஒதுக்கீடு
20 Mar 2023சென்னை : மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்திற்கு 2,800 கோடி ரூபாயும், மாணவர்களுக்கான பேருந்து கட்டண மானியத்திற்கு 1,500 கோடி ரூபாயும், டீசல் மானியத்திற்கு 2,000
-
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் : பட்ஜெட் உரையில் அறிவிப்பு
20 Mar 2023சென்னை : சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்தார்.
-
நிலம் வாங்குவோருக்காக பதிவுக்கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைப்பு: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
20 Mar 2023தமிழகத்தில் நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பழனி