முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாடி கொண்டிருந்த போது விபரீதம்: சூடானில் குண்டு வெடித்து 11 சிறுவர்கள் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      உலகம்
Sudan 2023 03 19

Source: provided

கார்டூம் : சூடானில் விளையாடி கொண்டிருந்த போது கீழே  கிடந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 11 சிறுவர்கள் பலியாகினர். 

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் பாகர் அல் ஹசால் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு மர்ம பொருள் அருகே கிடந்தது. 

இதனை பார்த்த சிறுவர்கள் அதனை தங்களது கையில் எடுத்து விளையாட ஆரம்பித்தனர். அப்போது அந்த மர்ம பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி சென்று பார்த்தனர். 

அப்போது விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அதில் 11 சிறுவர்கள் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். ஒரு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

இதில் சிறுவர்கள் கையில் வைத்திருந்த மர்ம பொருள் உள்நாட்டு போரின் போது வீசப்பட்ட வெடிக்காத சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்பதும், அதனை அறியாத சிறுவர்கள் கையில் வைத்து விளையாடியதால் இந்த விபரீதம் ஏற்பட்டதும் தெரிய வந்தது. விளையாட சென்ற இடத்தில் குண்டு வெடித்து 11 சிறுவர்கள் பலியான சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து