எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இம்பால் : மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மணிப்பூரில் போராட்டம் நடத்திய மாணவர்களை மீது போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி விரட்டியடித்தனர். மேலும் சில இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிப்பூரை பதட்டம் நிறைந்த மாநிலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நீடித்து வந்த மோதல் கடந்த மே மாதம் 3-ம் தேதி பெரும் கலவரமாக வெடித்தது. 4 மாதங்களை கடந்தும் கலவரம் முடிவின்றி தொடர்ந்து வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். வ
ன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சொந்த மாநிலத்திலேயே அகதிகளை போல் நிவாரண முகாம்களில் தங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மெய்தி இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள் குகி இனத்தை சேர்ந்தவர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலை தளத்தில் வெளியாகி நாட்டை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தலைநகர் இம்பாலை சேர்ந்த பிஜாம் ஹேமன்ஜித் என்ற 20 வயது மாணவனும், ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி என்ற 17 வயது மாணவியும் கடந்த ஜூலை 6-ம தேதி குகி இனத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டதாக தெரிகிறது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவர்களை தேடி வந்தனர். இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும், அவர்களது செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் முன்பு கூறியிருந்தனர்.
தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையில் பிஜாம் ஹேமன்ஜித் மற்றும் ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி ஆகிய இருவரும் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் புகைப்படங்களும் சமூகவலை தளங்களில் வெளியாகின. அவர்களின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனிடையே மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.
தலைநகர் இம்பால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கண்டன பேரணிகளை நடத்தினர். அப்போது பல இடங்களில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தனர். ஒரு சில இடங்களில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கையில் மாணவர்கள் 45 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில் மாநிலத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வெள்ளிக்கிழமை வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் விதமாக மணிப்பூர் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்தநிலையில், மணிப்பூரில் 19 காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானவை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு அறிவிப்பு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 18 hours 30 sec ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 3 days 21 hours ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 1 week 16 hours ago |
-
இன்று உருவாகும் மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை : நாளை அதிகாலை கரையை கடக்கும்
02 Dec 2023சென்னை : இன்று உருவாகும் மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
02 Dec 2023சென்னை : புயல் எதிரொலி காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.
-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம்
02 Dec 2023திருவனந்தபுரம், சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
சிக்கலில் மைக் டைசன்
02 Dec 2023பிரபல முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விமானத்தில் பயணம் செய்தபோது தன்னுடன் பயணித்த சக பயணியை அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
வெள்ளத்தில் மாயமான 77 பேரும் இறந்திருக்கக்கூடும்: சிக்கிம் அரசு அதிர்ச்சி தகவல்
02 Dec 2023கேங்க்டாக் : வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், கடந்த அக்டோபர் 4-ம் தேதி, லோனாக் ஏரிப் பகுதியில் மேகவெடிப்பின் காரணமாக கொட்டித்தீர்த்த அதீத கனமழையால், தீஸ்தா ஆற்றில்
-
ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத்துறையை குற்றம் கூற முடியாது: தூத்துக்குடியில் அண்ணாமலை பேட்டி
02 Dec 2023தூத்துக்குடி, அமலாக்க துறையில் ஒருவர் செய்த தவறுக்காக அனைவருமே தவறானவர்கள் என்று பார்ப்பது சரியல்ல என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய ராணுவத்தில் மேலும் 1.7 லட்சம் வீரர்கள் சேர்ப்பு
02 Dec 2023மாஸ்கோ, ரஷ்ய ஆயுதப் படையில் மேலும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்களை சேர்ப்பதற்கான ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளத
-
விஜயகாந்த் நலமுடன் உள்ளார் நடிகர் நாசர் பேட்டி
02 Dec 2023சென்னை, விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார்
-
ராஜஸ்தான், ம.பி., தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு : மிசோரமில் நாளை வாக்கு எண்ணிக்கை
02 Dec 2023புதுடெல்லி : மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை - டிச.
-
மழை நேரத்தில் மின் கம்பம் அருகே போக வேண்டாம் : மக்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை
02 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொது மக்கள் பாதுகாப்பான வழிமுறைகளை கடைபிடிப்பது குறித்து மின்சார வாரியம் சார்பில் வழிக
-
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
02 Dec 2023சென்னை, இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதற்கான வீடியோ ஆதாரம் : முதல் தகவல் அறிக்கையில் தகவல்
02 Dec 2023திண்டுக்கல் : அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.
-
ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்
02 Dec 2023பெங்களூரு, ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து முக்கிய தகவலை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.
-
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை எதிரொலி: புயல் கரையை கடக்கும் வரை மக்கள் வெளியே வரவேண்டாம் : சென்னை காவல்துறை அறிவுறுத்தல்
02 Dec 2023சென்னை : 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை காரணமாக புயல் கரையை கடக்கும் வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என்று சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
இளம் வாக்காளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு: விவேக் ராமசாமிக்கு வலுக்கும் எதிர்ப்பு
02 Dec 2023வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி முதன்முறை மற்றும் இளம் வாக்காளர்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-
அயோத்தியில் வரும் 15-ம் தேதிக்குள் புதிய விமான நிலையம் தயாராகி விடும்: உ.பி முதல்வர் யோகி தகவல்
02 Dec 2023அயோத்தி, உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் வரும் 15-ம் தேதிக்குள் மிகப் பெரிய விமான நிலையம் தயாராகி விடும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார்
-
ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிப்பு
02 Dec 2023புது டெல்லி, ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
-
மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்துவது தேவையற்றது: எடப்பாடி
02 Dec 2023சேலம், மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்துவது தேவையற்றது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 20 ஆண்டுகளில் ரூ. 4.16 லட்சம் கோடியை எட்டும் : ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிம மதிப்பு
02 Dec 2023மும்பை : ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலராக (ரூ.4.15 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.பி.எல்.
-
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற செஸ் வீராங்கனை வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
02 Dec 2023சென்னை : கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற செஸ் வீராங்கனை வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாரதிய ஜனதாவினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான் : நீலகிரியில் அமைச்சர் உதயநிதி பேச்சு
02 Dec 2023உதகை : பா.ஜ.க.வினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான் என்று தெரிவித்துள்ள, திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி தலைமையிலான அரச
-
புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது: வருவாய்த்துறை அமைச்சர் தகவல்
02 Dec 2023சென்னை, மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்தில் காணாமல் போன இந்திய மாணவன் சடலமாக மீட்பு
02 Dec 2023லண்டன் : இங்கிலாந்தில் காணாமல் போன இந்திய மாணவன் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இடிந்து விழும் அபாயத்தில் இத்தாலி சாய்ந்த கோபுரம்: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
02 Dec 2023போலோக்னா, இத்தாலியில் 900 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த முக்கிய அடையாளமாக திகழும் கரிசெண்டா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப
-
புயல் எச்சரிக்கை எதிரொலி: தயார் நிலையில் இருக்க மருத்துவ பணியாளர்களுக்கு அரசு உத்தரவு
02 Dec 2023சென்னை : புயல் எச்சரிக்கை காரணமாக மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.