எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை:சென்னை: கூட்டுறவுத் துறையின் "முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்" மூலம் மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழையினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 15,471 சிறுவணிகர்களுக்கு ரூ.26.21 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
“தமிழகத்தில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய "மிக்ஜாம்" புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
தமிழக முதல்வரின் அறிவுரையின்படி, “மிக்ஜாம்” புயல் மற்றும் பெருமழையினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட சிறு வணிகர்களின் தொழில் பயன்பாட்டுக்கான இயந்திரங்களை பழுதுபார்க்கவும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, அரசு ஆணை வெளியிடப்பட்டு "முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்" எனும் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் சென்னையில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலமும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கி மூலமும் 4% வட்டியில் அதிகபட்ச கடன் தொகை ரூ.10,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இக்கடனை 50 வாரங்களில் வாரந்தோறும் ரூ.200 என்ற அடிப்படையில் ஒரு வருட காலத்துக்குள் 4% வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் அல்லது மாதந்தோறும் ரூ.1000 வீதம் உரிய வட்டியுடன் திருப்பி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் டிசம்பர் 2023-ல் பெய்த பெரு மழை காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவணிகர்களுக்கு ரூ.10,000 வரை 4% வட்டிவீதத்திலும், ரூ.10,001 முதல் ரூ.1,00,000 வரை 10% வட்டிவீதத்திலும் (பயனாளிகளிடமிருந்து 6% வட்டியும், அரசிடமிருந்து 4% வட்டிமானியமாகவும் பெறப்படும்), தூத்துக்குடி மாவட்டத்தின் ஏரல் மற்றும் ஆத்தூர் நகரங்களில் உள்ள சிறுவணிகர்களுக்கு ரூ.100,000 முதல் ரூ.3,00,000 வரை 8.50% வட்டி வீதத்தில் கடன் வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 2024 பிப்.17 வரை ரூ.10,000 வரையிலான கடன்களை 11,949 சிறுவணிகர்கள் ரூ.1,194.35 லட்சம் அளவுக்கும், ரூ. ரூ.10,001 முதல் ரூ.1,00,000 வரையிலான கடன்களை 3480 சிறுவணிகர்கள் ரூ.1383.77 லட்சம் அளவுக்கும், இதுமட்டுமின்றி ரூபாய் ஒரு லட்சத்துக்கும் மேலான கடன்களை 42 சிறுவணிகர்கள் ரூ.43 லட்சம் அளவுக்கும் ஆக மொத்தம் 15,471 சிறுவணிகர்கள் ரூ.26.21 கோடி அளவுக்கு கடன் பெற்று பயனடைந்துள்ளனர்.
மேலும் மிக்ஜாம் புயல் மற்றும் பெரு மழை பாதிப்புக்குப் பின்பு மேற்கண்ட 8 மாவட்டங்களில் பயிர்க்கடன் 67,293 நபர்களுக்கு ரூ.421.20 கோடி, (சென்னை தவிர) கேசிசி கால்நடை கடன் 9,700 நபர்களுக்கு ரூ.64.58 கோடி (சென்னை தவிர) , மத்திய கால வேளாண் கடன் 608 விவசாயிகளுக்கு ரூ.13.03 கோடி, மகளிர் சுய உதவி குழுக்கடன் 2,130 நபர்களுக்கு ரூ.151.64 கோடி, TABCEDCO கடன் 218 நபர்களுக்கு ரூ.3.47 கோடி, TAMCO கடன் 175 நபர்களுக்கு ரூ.2.25 கோடி, NHFDC கடன் 293 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.12 கோடி, தாட்கோ கடன் 187 நபர்களுக்கு ரூ7.09 கோடி, சிறுவணிக கடன் 10,948 சிறுவணிகர்களுக்கு ரூ.36.62 கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன கடன் (MSME) 614 பயனாளிகளுக்கு ரூ.3.73 கோடி, பணிபுரியும் மகளிர் கடன் 156 மகளிருக்கு ரூ.5.71 கோடி, மகளிர் தொழில் முனைவோர் கடன் 503 மகளிருக்கு ரூ.2.44 கோடி ஆக மொத்தம் 92,825 நபர்கள் ரூ.712.87 கோடி அளவுக்கு கடன் பெற்று பயனடைந்துள்ளனர்.
மேலும், தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சிறப்பு கடன் முகாம்களில், சிறுவணிகர்கள் வங்கிக் கிளைகளை நேரில் அணுகியோ அல்லது உரிய ஆவணங்கள் மற்றும் விவரங்களை கூட்டுறவுத் துறையின் வலைதளத்தில் உள்ள இணையவழி விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பித்தோ பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
ஓ.பன்னீர்செல்வம் கேள்வியால் குலுங்கி சிரித்த எடப்பாடி பழனிசாமி
17 Mar 2025சென்னை : மாந்திரீக பூஜை குறித்து ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியபோது எடப்பாடி பழனிசாமி குலுங்கி சிரித்தார்.
-
சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமி திரும்புகிறார்: நாசா அறிவிப்பு
17 Mar 2025நாசா : சுனிா வில்லியம்ஸ் இன்று பூமிக்கு திரும்புவார் என்று நாசா அறிவித்துள்ளது.
-
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிப்பு நடைமுறை
17 Mar 2025புதுடெல்லி : வருகிற 1-ம் தேதி முதல் புதிய வருான வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் - புதின் இன்று பேச்சுவார்த்தை
17 Mar 2025மாஸ்கோ : உக்ரைன்- ரஷியா இடையேயான போர் நிறுத்த ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தையை அமெரிக்கா அதிபர் நடத்த உள்ளார்.
-
ஜார்க்கண்டில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
17 Mar 2025ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட், மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு அருகிலிருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்தது.
-
நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்: சுகாதாரத்துறை
17 Mar 2025சென்னை : நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
-
எனக்கு புற்றுநோய் பாதிப்பு இல்லை - மம்மூட்டி விளக்கம்
17 Mar 2025கேரளா : எனக்கு புற்றுநோய் பாதிப்பு இல்லை என்று மம்மூட்டி விளக்கமளித்துள்ளார்.
-
துளசி கப்பார்ட் - அஜித் தோவல் சந்திப்பு
17 Mar 2025டெல்லி : இந்தியா வந்த அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார்.
-
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் இன்று மாலை பூமிக்கு திரும்புகிறார்
17 Mar 2025வாஷிங்டன் : 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பூமி திரும்பவுள்ளார்.
-
தி.மு.க. - அ.தி.மு.க. இடையே காரசார விவாதம்: மடிக்கணினி விவகாரத்தில் இ.பி.எஸ். கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
17 Mar 2025சென்னை : மடிக்கணினி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தி.மு.க. - அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இ.பி.எஸ்.
-
எதிர்க்கட்சியினரை ஏன் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் கேட்டதில்லை: சபாநாயகர்
17 Mar 2025சென்னை : எதிர்க்கட்சியினரை ஏன் இவ்வளவு நேரம் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் இதுவரை என்னிடம் கேட்டதில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
தி.மு.க. - பா.ஜ.க. இடையே மறைமுக கூட்டணி: த.வெ.க. பகீர் குற்றச்சாட்டு
17 Mar 2025சென்னை : தி.மு.க. , பா.ஜ.க. இடையே மறைமுக கூட்டணி உள்ளதாக த.வெ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
-
உக்ரைனிய ஆயுத படைகளுக்கு புதிய தலைவரை நியமனம் செய்தார் அதிபர் ஜெலன்ஸ்கி
17 Mar 2025கீவ் : உக்ரைனிய ஆயுத படைகளின் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
போப்பின் புதிய புகைப்படம் வெளியீடு
17 Mar 2025ரோம்நகர் : போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின்முன் அமர்ந்து இருக்கும் புதிய புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
-
சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: ஜப்பானுடன் இணைந்து செயல்படுத்த முடிவு
17 Mar 2025புதுடில்லி : சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-5 திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.
-
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் தோல்வி : தீர்மானத்துக்கு 63 பேர் ஆதரவு - 154 பேர் எதிர்ப்பு
17 Mar 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது.
-
பாலாற்றின் குறுக்கே ரூ.70 கோடியில் தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்
17 Mar 2025சென்னை : வெண்கோடி அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.70 கோடியில் தடுப்பணை அமைக்க திட்டம் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் புதிய நீதிபதியாக பதவியேற்ற ஜாய்மல்யா பாக்சி : நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
17 Mar 2025புதுடெல்லி : கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் மூத்த நிதிபதியான ஜாய்மல்யா பாக்சி, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
ஐ.பி.எல்.அணி கேப்டன்கள் கூட்டம்: பி.சி.சி.ஐ. ஏற்பாடு
17 Mar 2025மும்பை : ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளின் கேப்டன்களுடன் கூட்டம் நடத்த பி.சி.சி.ஐ. ஏற்பாடு செய்துள்ளது.
-
மும்பை வீரருக்கு நோட்டீஸ்
17 Mar 202518-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
பிரதமர் மோடி - நியூசி. பிரதமர் சந்திப்பு
17 Mar 2025டெல்லி : பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கிறிஸ்டோபர் லக்சன் ஆலோசனை நடத்தினார்.
-
லக்னோ அணியில் ஷர்துல் தாகூர்?
17 Mar 2025லக்னோ, மார்ச் 18-
-
எங்களை யாராலும் பிரிக்க முடியாது: செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இ.பி.எஸ். பதில்
17 Mar 2025சென்னை : நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்.
-
கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமா் கோயில்
17 Mar 2025அயோத்தி : அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் ரூ. 400 கோடிக்கு வரி செலுத்தியதாக தகவல் தெரிவித்துள்ளது.
-
உள்கட்சி பிரச்னைகளை திசைதிருப்ப சபாநாயகர் மீது அ.தி.மு.க. தீர்மானம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Mar 2025சென்னை : உள்கட்சிப் பிரச்னைகளைத் திசைதிருப்பவே பேரவைத் தலைவர் மீது அ.தி.மு.க. தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.