முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குனி மாத பவுர்ணமி: 20-ம் தேதி முதல் திருப்பதியில் 5 நாட்கள் தெப்ப உற்சவம்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2024      ஆன்மிகம்
Tirupati 2023-09-26

Source: provided

திருப்பதி : பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 20-ம் தேதியில் இருந்து தொடர்ந்து 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 20-ம் தேதியில் இருந்து தெப்ப உற்சவம் தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெப்ப உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவாரி புஷ்கரணியை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தெப்ப உற்சவம் நடைபெறும் இந்த 5 நாள்களில் சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து