முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      இந்தியா
Kejriwal 2024-02-17

Source: provided

புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராக மாட்டார் என  ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. 

டெல்லியில் மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த அமலாக்கத்துறை டெல்லி முன்னாள் துணை முதல்வர்  மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை கைது செய்தது.

இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 8 முறை சம்மன் அனுப்பியும்  கெஜ்ரிவால், அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்னும் ஆஜராகவில்லை. 

அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார். இதற்கிடையே விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. 

இந்த வழக்கில் கடந்த 16-ம் தேதி ஆஜராகும்படி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடந்த 16-ம் தேதி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதில் வரும் 21-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மற்றொரு  சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கிலும் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. 

அந்த ஒப்பந்தம் தொடர்பாக நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. கடந்த மாதம், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. என்.டி.குப்தா, டெல்லி குடிநீர் வாரிய முன்னாள் உறுப்பினர் ஷாலப் குமார், பட்டய கணக்காளர் பங்கஜ் மங்கல் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று 18-ம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. 

இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று(நேற்று) ஆஜராக மாட்டார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. கோர்ட்டில் இருந்து ஜாமீன் பெற்ற பின்னரும், அமலாக்கத்துறை ஏன் மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்புகிறது? அமலாக்கத்துறையின் சம்மன்கள் சட்டவிரோதமானது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து