முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      தமிழகம்
Tamilsai 2023-11-03

Source: provided

சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  மேலும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து  தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார்.  இதில் தோல்வி அடைந்த தமிழிசை சவுந்தரராஜன், அதே ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். 

அதன் பிறகு, 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுவை துணை நிலை கவர்னர் பொறுப்பும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக  வழங்கப்பட்டு இருந்தது.  தற்போது பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தனது கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.   

இது குறித்து பேசிய தமிழிசை, கவர்னர்  பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான்; மீண்டும் அரசியலுக்கு வருகிறேன். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட உள்ளேன். புதுச்சேரியில் போட்டியிட மாட்டேன். எந்த தொகுதி என்று பா.ஜ.க. மேலிடம் அறிவிக்கும் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து