முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 28 மார்ச் 2024      தமிழகம்
EPS-VNR-2024-03-28

விருதுநகர், தி.மு.க. அரசு  பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை   சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் விஜயபிரபாகரனை ஆதரித்து சிவகாசி பாவாடிதோப்பு திடலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு முரசு சின்னத்திற்கு  ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ,  ஆர்.பி உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சியினர், அ.தி.மு.க. ஆதரவு அமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக வரவேற்று பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எந்த சேனலை திறந்து பார்த்தாலும் எடப்பாடியை பற்றி தான் பேச்சு. கன்னியாகுமரி முதல் டெல்லி வரை எடப்பாடி பழனிச்சாமியை பற்றிதான் பேசுகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி பின்னால் 2 கோடி தொண்டர்கள் உள்ளனர்.  உள்ளதை பேசுபவர் நல்லதை செய்பவர். எளிமையானவர் , வலிமையானவர். எது வந்தாலும் சந்திக்கும் திறன் உள்ளவர். எடப்பாடியார் கூட்டத்திற்கு எழுச்சியாக தொண்டர்கள், பொதுமக்கள் வருகிறார்கள். எல்லோருக்கும் எதையும் செய்பவர் அள்ளி அள்ளி கொடுப்பவர் எடப்பாடி பழனிச்சாமி என பேசினார்.

பின்னர் உரை நிகழ்த்திய விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகர்,  எனக்காக பிரச்சாரம் செய்ய வந்த வருக்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி . நான் அரசியலுக்கு வருவேன் என்று தெரியும். ஆனால் இவ்ளோ சீக்கிரமாக வருவேனு தெரியாது. நான் சென்னைக்காரன் என விமர்சனம் செய்கிறார்கள். நான் இந்த மண்ணுக்கு சொந்துக்காரன். இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி. அ.தி.மு.க. தேமுதிக  கூட்டணி தொடரும். 2018 எனது அப்பா பேசிய இடத்தில் நான் இப்போது பேசுகிறேன். முரசு சின்னத்தில் எனக்கு வாக்களித்து  என்னை வெற்றி பெற்றால் உங்களது குரலாக டெல்லியில் ஒலிப்பேன் -  என பேசினார். 

பின்னர் சிறப்புரையாற்றி, முரசு  சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  தனது வாழ்நாளை மக்களுக்காக அற்பனித்தவர் புரட்சி தலைவி அம்மா. நாட்டு மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் - நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் நமது தலைவர்கள். வீட்டு மக்களுக்காத வாழ்ந்த தலைவர் கருணாநிதி. நமது வேட்பாளர்களை விட கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். தி.மு.க.  சீட் கொடுத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை அழ வைக்கிறார்கள். தி.மு.க. வில் கூட்டணி வைப்பவர்களை தி.மு.க. வளர விடாது. நம்மிடம் கூட்டணி வைத்தால் நாம் கை தூக்கி வளத்து விடுவோம்.

ஸ்டாலினுக்கு தூக்கம் போச்சு. எங்கு பார்த்தாலும் என்னை பற்றியே பேசுகிறார். தி.மு.க. கட்சி காரர்கள் என்ன என்ன அட்டூலியம் செய்கிறார்கள் என ஸ்டாலினே கூறுகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானதை செய்யும். தி.மு.க. அரசு  பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை - தி.மு.க. வின் 38 எம்பி க்கள் பாராளுமன்றத்தில் எந்த குரலும் கொடுக்க வில்லை - 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் பட்டாசு தொழிலுக்கு அழுத்தம் கொடுப்போம் - சட்டதிருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - பட்டாசு தொழில் நசுங்கி போச்சு இந்த நிலையில் ஸ்டாலின் நலமா என கேட்கிறார் . தி.மு.க. ஆட்சியில் இருந்தால் யாராக நலமாக இருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். 

விருதுநகரில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் என்னை பற்றி பேசியுள்ளர். இரட்டை வேடும் போடும் கட்சி தி.மு.க.தான். நாங்கள் கொடுத்த புகாரை ஆளுநர் விசாரித்து இருந்திருந்தால் பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வந்திருக்கும் - 2026 வரை நாம் காத்திருக்க தேவையில்லை. தி.மு.க. அவ்ளோ ஊழல் செய்திருக்கிறது.

எனக்கு முதுகெலும்பு இல்லை என ஸ்டாலின் கூறுகிறார். எனக்கா முதலெலும்பு இல்லை வந்து பாருங்கள் மோதி பார்க்கலாம். ஸ்டாலின் அவர்களே பேச்சுக்கு ஒரு எல்லை உண்டு. அ.தி.மு.க. தொண்டர்கள் பதிலடி கொடுத்தால் அவ்ளோதான். நான் எதையும் செய்ய தயார். எனது ஆட்சியில் மக்கள் பணி செய்ய வேண்டும்  என்று இருந்தேன் நான் வழக்கு போட்டிருந்தால் எத்தனையோ வழக்கு போட்டிருக்கலாம். மக்கள் பணி செய்ய வேண்டும் என ஆட்சி செய்தேன்.  தி.மு.க. வோ அ.தி.மு.க. தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுகிறது. தி.மு.க. - வில் பல அமைச்சர்கள் நீதிமன்றம் ஏறி இறங்கி வருகிறார்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மாவட்ட தி.மு.க. கூட்டணி கட்சியினர் தோல்வி சந்திப்பர் என்று பேசினார்.

கூட்டத்தில் அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, நிர்வாகிகள் தேமுதிக மாவட்டம், நகர, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து