முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளை வைத்து படம் எடுப்பேன் - ராகவா லாரன்ஸ்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      சினிமா
Raghava-Lawrence 2024-04-16

Source: provided

தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்வு , ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” குழு சார்பில், சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் பேசுகையில், ‘மல்லர் கம்பம் என்ற கலையை நல்ல வலுவான உடல் உள்ளவர்கள் மட்டுமே செய்ய முடியும். இங்கு இவர்கள் செய்வதை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இங்கு நிகழ்வு நடத்தப்படுகிறது என்றார்.

இவர்கள் வாடகை கட்டக் கூட கஷ்டப்படுகிறார்கள். அதனால் உங்கள் வீட்டு விழா, தெரிந்த  நிகழ்ச்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள் என்று கேட்டுக்கொண்டார். அது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளேன், அதன் மூலம் வரும் வருமானத்தில், இவர்களுக்கு வீடுகட்டி தரவுள்ளேன். நீங்களும் இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி. இந்தக் கலையை கற்றுக்கொண்ட அனைவருக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்கூட்டி வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து