முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை மிகவும் கவர்ந்த மாநிலம் தமிழகம் : கிருஷ்ணகிரியில் ராஜ்நாத் சிங் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      தமிழகம்
Rajnath-Singh 2023-11-14

Source: provided

கிருஷ்ணகிரி :  தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த மாநிலம். இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழில் வணக்கம் கூறி அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையை தொடங்கினார். அப்போது பேசிய அவர், 

பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமான செங்கோலை பாராளுமன்றத்தில் நிறுவி பெருமைப்படுத்தியவர் பிரதமர் மோடி.  பிரதமரின் செயல்பாட்டுக்கு பின்னர் தமிழ்நாடு என்று பேசும் போது முதலில் நம் நினைவுக்கு வருவது செங்கோல் தான். 

பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரத்திற்கு முழு மதிப்பளிக்கிறார். உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் பிரதமரால் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த மாநிலம். இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ்.  

பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலகில் 5ஜி சேவை பயன்பாட்டில் இருக்கும் போது இந்தியாவில் மோடி 6ஜி சேவை வழங்க முயற்சி செய்து வருகிறார். நாட்டில் ராணுவ கப்பல் கட்டும் அளவிற்கு இந்தியா உயர்ந்து உள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து