முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      இந்தியா
Maharashtra 2024-04-30

Source: provided

மும்பை :  மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள மும்பை- ஆக்ரா நெடுஞ்சாலையில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்தவுடன் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து உதவி செய்தனர். முதற்கட்ட தகவலின்படி, பஸ் டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து