எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவைச் சேர்ந்த ஹான் ஹூவை எதிர்கொண்டார். இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 21-13 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ஹான் ஹூ 21-14 என 2-வது செட்டை வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை பி.வி.சிந்து 21-12 என கைப்பற்றியதுடன், அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தினார். மற்றொரு இந்திய வீராங்கனை அஷ்மிதா சலியா காலிறுதிச்சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
தினேஷ் குறித்து கோலி
தினேஷ் கார்த்திக் உடனான தனது நட்பு குறித்து இந்திய அணியின் விராட் கோலி மனம் திறந்துள்ளார். தினேஷ் கார்த்திக் மிகவும் நேர்மையானவர் எனவும், தனது கடினமான காலங்களில் ஊக்கமளித்துள்ளார் எனவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆடுகளத்துக்கு வெளியே தினேஷ் கார்த்திக்குடன் நிறைய சுவாரசியமான உரையாடல்களை மேற்கொண்டுள்ளேன். அவர் சிறந்த மனிதர். கிரிக்கெட் மட்டுமின்றி பல விஷயங்கள் குறித்தும் அவருக்கு மிகுந்த அறிவு இருக்கிறது. தினேஷ் கார்த்திக்குடன் பேசுவது எப்போதும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. நம்பிக்கையின்றி நான் தடுமாறினேன். தினேஷ் கார்த்திக் எனக்கு அருகில் அமர்ந்து, எனது தடுமாற்றம் தொடர்பாக எனக்கு தெரியாதவற்றை விளக்கமாக எடுத்துக் கூறினார். அவரது வார்த்தைகள் எனக்கு ஊக்கமளித்தது. தினேஷ் கார்த்திக் மிகச் சிறந்த வீரர். அவரது எதிர்கால பயணங்களுக்கு எனது வாழ்த்துகள் என்றார். ஐபிஎல் தொடரில் இதுவரை 257 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 4842 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தீபிகா பல்லிகல் வருத்தம்
தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரைக் கவுரவித்து வழியனுப்பினர். இந்நிலையில், தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து ஆர்சிபி அணி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அணி வீரர் விராட் கோலி, பயிற்சியாளர் சங்கர் பாசு, தினேக் கார்த்திக் மனைவி தீபிகா பல்லிகல் ஆகியோர் தங்களது எமோஷனலை பகிர்ந்துள்ளனர்.
தினேஷ் கார்த்திக் குறித்து அவரது மனைவியும் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகல் கூறியிருப்பதாவது:- தினேஷ் கார்த்திக்கின் மன உறுதியால் ஈர்க்கப்பட்டேன். கார்த்திக் தன்னைத்தானே மீண்டும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார். அனைவராலும் விரும்பப்படும் ஒரு கிரிக்கெட் வீரரை நீங்கள் அடிக்கடி காண முடியாது. கார்த்திக் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதால், தன்னுடனும் அவர்களது குழந்தைகளுடனும் அதிக நேரம் செலவிடுவார். என்னுடைய வற்புறுத்தலால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றார்.
அரையிறுதியில் ஜோகோவிச்
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுயில் செர்பியாவின் ஜோகோவிச், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூருடன் மோதினார். இதில் ஜோகோவிச் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதேபோல், நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜென்டினாவின் செபாஸ்டியனுடன் மோதினார். இதில் ரூட் 6-3, 3-6, 6-4 என்ற செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
கோலி ஓய்வு குறித்து வாகன்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விராட் கோலி ஓய்வு குறித்து பேசியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது, விராட் கோலி அதிலிருந்து விலகி, லண்டனில் சாதாரண ஒரு வாழ்க்கையை நடத்தினார் என்று நினைக்கிறேன். அந்த வாழ்க்கை அவருக்கு பிடித்திருக்கிறது. ஓய்வுக்குப் பிறகு அவர் அப்படியான ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ நினைப்பார்.
விராட் கோலி ஓய்வு பெறுவதைப் பற்றி நீங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவர் தற்போதைய ஐ.பி.எல் சீசனில் மிகச் சிறப்பாக விளையாடி 700-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் இதன் அடிப்படையில் பார்த்தால் அவர் பல ஆண்டுகள் விளையாடுவதற்கு தகுதியோடு இருக்கிறார். ஆனால் இன்னும் இரண்டு மூன்று, ஆண்டுகள் ஆகும் பொழுது நிலைமைகள் மாறும். அப்பொழுது அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவார். விராட் கோலி களத்தில் வெளிப்படுத்தும் ஆற்றலை நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடக்கம்
21 Sep 2025கர்நாடகா : கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது, மைசூரு தசரா விழா.
-
வாக்கு திருட்டு புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : கர்நாடக அரசு நடவடிக்கை
21 Sep 2025பெங்களூரு : 2023ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பதிவான அனைத்து வாக்கு திருட்டு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு
-
விர்ஜீனியா மாகாண வழக்கறிஞராக லிண்ட்சேவை நியமித்தார் அமெரிக்க அதிபர்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு நாட்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் உயிரிழப்பு
21 Sep 2025காசா நகரம் : காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
21 Sep 2025மும்பை : நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பிரதமரின் தாயாரை அவமதித்ததாக ஆர்.ஜே.டி. மீது பா.ஜ.க. மீண்டும் குற்றச்சாட்டு
21 Sep 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பா.ஜ.க. மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
-
அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வு : 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வால் சுமார் 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.